அலோபதி மருத்துவம் குறித்த திரு. செந்தமிழன் அவர்களின் கட்டுரைகளையும், அதற்கான எதிர்வினைகளையும் சற்றே தாமதமாகவே படித்தேன். ஒன்று மட்டும் தெளிவாகப் புரிகிறது...
திரு. செந்தமிழன் கேட்ட எந்தக் கேள்விக்கும் ‘அலோபதி’ (என அழைக்கப்படும்) மருத்துவர்கள் பதில் கொடுக்கவில்லை. 1. சர்க்கரை நோய் / மஞ்சள் காமாலை நோய்களுக்கு ‘அலோபதி’யில் மருந்து உண்டா இல்லையா? 2. அரசியல்வாதிகளைப் போல முகவரி கேட்காமல், திரு. செந்தமிழன் குறிப்பிட்டதுபோல, முகநூல் / தி இந்து தமிழ் நாளிதழ் மூலமாக சட்ட நடவடிக்கை எடுக்க தயாரா? 3. அவரது ஆவணப்படத்திற்கான விவாதத்தில் பங்கேற்கத் தயாரா? இல்லையா? இதற்கெல்லாம் பதில் சொல்ல திராணியில்லாத ‘அலோபதி’ மருத்துவர்கள் மிரட்டல் விடுப்பது, கீழ்த்தரமாக பதில் அளிப்பது, நாகரிகம் அல்ல.
’அலோபதி’ மருத்துவர்கள், தங்களது மருத்துவ முறைகளை உண்மையில் நேசிப்பார்களேயானால், அதில் இருக்கும் குறைபாடுகளை / பொய் புரட்டுகளை / பொய் புரட்டர்களைக் களைய முற்படுவதே நேர்மை. அதுவே, தங்களை நம்பி வரும் நோயாளிகளுக்கு அவர்கள் செய்யும் தொண்டு. தொழில் அறம்.
Comments
Post a Comment