இயன்றவரை பிறருக்கு உதவுவோம் இயற்கை விவசாயத்தை மீட்டு எடுப்போம் மொன்சாண்டோ போன்ற அரக்கர்களை விரட்டுவோம் விதைகளே இனி பேராயுதம் என்று நம்மை வழி காட்டிய அய்யா நம்மாழ்வார் பாதையில் பயணம் செய்வோம் நோயின்றி வாழ முயற்சி செய்வோம்
செந்தமிழன் கட்டுரைகள்
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
-
செந்தமிழன் கட்டுரைகள் அவரிடம் அனுமதி பெற்று இட படுகிறது என்பதை தெரிவித்து கொள்கிறேன்
Senthamizhan Maniarasan shared a link . 20 March 2013 நண்பர்களே, எனது கட்டுரைகளை மாற்றாமல், சுருக்காமல் அப்படியே வெளியிடுவதாக இருந்தால், என்னிடம் அனுமதி பெறத் தேவையே இல்லை. இப்போது அதற்கெல்லாம் அவகாசம் நமக்கு இல்லை. அதேபோல, எந்த இணையத் தளத்திலாவது வெளியிடும்போது, முகநூலிலும் எனக்கு அறிவிக்கை ச ெய்தால், மேலும் பரப்புதற்கு ஏதுவாக இருக்கும். நம்முடைய ஊடகம் இது. வலுப்படுத்தி எடுத்துச் செல்வோம். வாரீர்! பின்வரும் இணையம் ‘மாணவர்களே, எவரையும் நம்பாதீர்கள்’ கட்டுரையை வெளியிட்டுள்ளது. http://tamizl.com/?p=787 இவ்வாறான இணையங்களை வலுப்படுத்துவோம். மேலும் உருவாக்குவோம்! களத்தில் நிற்கும் நம் பிள்ளைகளுக்கு உறுதுணையாய் நிற்போம். Tamizl tamizl.com மாணவர்களே, எவரையும் நம்பாதீர்கள்!-ம.செந்தமிழன் சிறப்புக் கட்டுரை
Senthamizhan Maniarasan with Engals Raja and 24 others இனிப்பும் முதல் மழையும் இணைய விற்பனையில்! ம.செந்தமிழன் இரண்டு இனிய சேதிகளை உங்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டியுள்ளது. வெளியிடப்பட்ட இருபதே நாட்களில், ‘முதல் மழை பெய்தபோது பூமியில் மரங்கள் இல்லை’ நூல், இரண்டாம் பதிப்பை அடைந்துள்ளது. ’இனிப்பு’ நூல் விரைவில் இரண்டாம் பதிப்பை அடைய உள்ளது. சென்னைப் புத்தகக் கண்காட்சியின் இறுதி நாளான 22/01/14 ஆம் நாள்தான், இந்த இரு புத்தகங்கள் வெளியாகின. இதுவரை, எந்தப் பெரிய நூல் விற்பனைக் கடைக்கும் நாங்கள் அவற்றை அனுப்பவும் இல்லை. சில நிகழ்ச்சிகளில் விற்றதோடு சரி. ‘இயல் வாகை’, ‘வானகம்’, ‘பூவுலகின் நண்பர்கள்’, ‘புத்துயிர் பதிப்பகம்’ ஆகிய நான்கு அமைப்புகளும் தமது நிலையங்களில் இப் புத்தகங்களை முன்னிறுத்தின. இவ்வமைப்புகளுக்கும் இவற்றின் பொறுப்பாளர்களுக்கும் நன்றி. எனது இனிய நண்பரும் வானகம் பொறுப்பாளரும், தொடு சிகிச்சையாளருமான ஏங்கெல்ஸ் ராஜா, கம்பம் அகாடமி முதல்வர் தோழர் உமர் பரூக், தொடு சிகிச்சையாளரும் இனிப்பு குழு உறுப்பினருமான அருள் ஒளி ஆயோரின் பங்களிப்புகள் தொடர்ந்து கொண்டுள்ளன. நாடெங்கும் உள்ள தொடு சிகிச்ச...
Senthamizhan Maniarasan 13 October 2013 ஒரு நோயை குணப்படுத்த முடியும் என்று சொன்னால், அது அலோபதி ’அறிவுக்கு’ ஆத்திரத்தை உண்டாக்குகிறது. எவ்வளவு ஆத்திரப்பட்டாலும், தீர்வுகள் பெருகிக்கொண்டுதான் இருக்கின்றன, இன்னும் பெருகத்தான் போகின்றன. அலோபதி குறித்த தகவல்களை எந்த ஊடகத்தில் எழுதுகிறேனோ அதே ஊடகத்தின் வழியாக சட்ட நடவடிக்கை எடுக்கலாம். முகவரி கேட்கும் அலோபதி ஆதரவாளர்களும், மருத்துவர்களும் முகநூல் வழியாகவோ, நான் எழுதும் அச்சு ஊடகங்கள் வழி யாகவோ என் மீது சட்ட நடவடிக்கை கோரலாம். அல்லது, படம் வெளியான பின்னர் அதன் தயாரிப்பு நிறுவனம் வழியாக நடவடிக்கை எடுக்கலாம். உங்கள் சட்ட ஆலோசகர்களை அணுகினால், வழி சொல்லுவார்கள். இந்திய மருந்து மற்றும் அழகுசாதனச் சட்டப்படி அலோபதியில்தான் சர்க்கரைக்கு ‘தீர்க்கும்’ மருந்து இல்லை. மரபு மருத்துவ முறைகளில் ‘தீர்க்க்கும்’ மருந்து இல்லை என இந்தியச் சட்டம் கூறவில்லை. இப்போது எனது கட்டுரைக்கு எதிராகப் பொங்கும் அலோபதி மருத்துவர்கள் எனக்கு எதிராக அல்ல, இந்தியச் சட்டத்திற்கு எதிராகப் பொங்குகிறார்கள். பொங்கட்டும். இதை அவர்கள் நீதிமன்றத்தில் வாதிடட்டும். இதேவேளை...
Comments
Post a Comment