இயன்றவரை பிறருக்கு உதவுவோம் இயற்கை விவசாயத்தை மீட்டு எடுப்போம் மொன்சாண்டோ போன்ற அரக்கர்களை விரட்டுவோம் விதைகளே இனி பேராயுதம் என்று நம்மை வழி காட்டிய அய்யா நம்மாழ்வார் பாதையில் பயணம் செய்வோம் நோயின்றி வாழ முயற்சி செய்வோம்
Senthamizhan Maniarasan shared a link . 20 March 2013 நண்பர்களே, எனது கட்டுரைகளை மாற்றாமல், சுருக்காமல் அப்படியே வெளியிடுவதாக இருந்தால், என்னிடம் அனுமதி பெறத் தேவையே இல்லை. இப்போது அதற்கெல்லாம் அவகாசம் நமக்கு இல்லை. அதேபோல, எந்த இணையத் தளத்திலாவது வெளியிடும்போது, முகநூலிலும் எனக்கு அறிவிக்கை ச ெய்தால், மேலும் பரப்புதற்கு ஏதுவாக இருக்கும். நம்முடைய ஊடகம் இது. வலுப்படுத்தி எடுத்துச் செல்வோம். வாரீர்! பின்வரும் இணையம் ‘மாணவர்களே, எவரையும் நம்பாதீர்கள்’ கட்டுரையை வெளியிட்டுள்ளது. http://tamizl.com/?p=787 இவ்வாறான இணையங்களை வலுப்படுத்துவோம். மேலும் உருவாக்குவோம்! களத்தில் நிற்கும் நம் பிள்ளைகளுக்கு உறுதுணையாய் நிற்போம். Tamizl tamizl.com மாணவர்களே, எவரையும் நம்பாதீர்கள்!-ம.செந்தமிழன் சிறப்புக் கட்டுரை
Senthamizhan Maniarasan 13 October 2013 ஒரு நோயை குணப்படுத்த முடியும் என்று சொன்னால், அது அலோபதி ’அறிவுக்கு’ ஆத்திரத்தை உண்டாக்குகிறது. எவ்வளவு ஆத்திரப்பட்டாலும், தீர்வுகள் பெருகிக்கொண்டுதான் இருக்கின்றன, இன்னும் பெருகத்தான் போகின்றன. அலோபதி குறித்த தகவல்களை எந்த ஊடகத்தில் எழுதுகிறேனோ அதே ஊடகத்தின் வழியாக சட்ட நடவடிக்கை எடுக்கலாம். முகவரி கேட்கும் அலோபதி ஆதரவாளர்களும், மருத்துவர்களும் முகநூல் வழியாகவோ, நான் எழுதும் அச்சு ஊடகங்கள் வழி யாகவோ என் மீது சட்ட நடவடிக்கை கோரலாம். அல்லது, படம் வெளியான பின்னர் அதன் தயாரிப்பு நிறுவனம் வழியாக நடவடிக்கை எடுக்கலாம். உங்கள் சட்ட ஆலோசகர்களை அணுகினால், வழி சொல்லுவார்கள். இந்திய மருந்து மற்றும் அழகுசாதனச் சட்டப்படி அலோபதியில்தான் சர்க்கரைக்கு ‘தீர்க்கும்’ மருந்து இல்லை. மரபு மருத்துவ முறைகளில் ‘தீர்க்க்கும்’ மருந்து இல்லை என இந்தியச் சட்டம் கூறவில்லை. இப்போது எனது கட்டுரைக்கு எதிராகப் பொங்கும் அலோபதி மருத்துவர்கள் எனக்கு எதிராக அல்ல, இந்தியச் சட்டத்திற்கு எதிராகப் பொங்குகிறார்கள். பொங்கட்டும். இதை அவர்கள் நீதிமன்றத்தில் வாதிடட்டும். இதேவேளை...
Senthamizhan Maniarasan 15 December 2013 மருத்துவமனைக்குச் சென்று மரணம் அடைவோர்! -இந்திய அரசின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரம் ம.செந்தமிழன் இத்துடன் உள்ள இணைப்பில் உள்ளது எனது கற்பனையோ காவியமோ அல்ல, இந்திய அரசின் மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் துறையினரின் அதிகாரப்பூர்வ புள்ளி விவரம். இந்தியாவில் மக்களது மரணம் குறித்த புள்ளியியல் ஆய்வில், மரணங்கள் நிகழும்முன், மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதா? இல்லையா?என்பதைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் விவரம் கீழே. மரணத்துக்கு முந்தைய மருத்துவ உதவி குறித்த சதவீதம் 1. நிறுவனம் சார்ந்த / மருத்துவமனைகளில் மருத்துவம் வழங்கப்பட்டு இறந்தோர்: நகரங்களில்: 37.1% கிராமங்களில்: 18.3% 2. நிறுவனம் சாராத வகைகளில் / கிளினிக்குகள் உள்ளிட்ட பல சிகிச்சை மையங்களில் மருத்துவம் வழங்கப்பட்டு இறந்தோர்: நகரங்களில்: 58.3% கிராமங்களில்: 67.2% 3. எந்த வகையிலும் மருத்துவமே மேற்கொள்ளாமல் மரணமடைந்தோர்: நகரங்களில்: 4.6% கிராமங்களில்: 14.6% அதாவது, மருத்துவமனைக்கோ, கிளினிக்கிற்கோ செல்லாதவர்கள் அல்லது வேறு எந்தவகையிலும் மருந்துகள் உட்கொள்ளாதவர்கள்தான், மரணத்தின் பிடி...
Comments
Post a Comment